சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!by பானுஷபானா Yesterday at 15:29
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Yesterday at 14:31
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52
» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46
» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53
» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18
» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37
» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27
» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25
» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46
» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45
» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41
» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38
» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35
» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28
» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17
» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16
» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13
» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07
» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06
» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04
» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02
» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00
.
கச்சத்தீவு அருகே இன்று அதிகாலை ராமேசுவரம் மீனவர்கள் 50 பேர் கடத்தல்
கச்சத்தீவு அருகே இன்று அதிகாலை ராமேசுவரம் மீனவர்கள் 50 பேர் கடத்தல்

ராமேசுவரம், மார்ச் 14-
கச்சத்தீவு அருகே இன்று அதிகாலை ராமேசுவரம் மீனவர்கள் 50 பேர் கடத்தல்: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்களை தாக்குவதும், அவர்களை கடத்தி செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் ராமேசுவரம் மீனவர்கள் தினமும் கண்ணீர் வடித்து வருகிறார்கள்.
நேற்று ராமேசுவரத்தில் இருந்து 658 விசைப்படகுகளில் 3,000 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று மதியம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தங்கச்சிமடத்தை சேர்ந்த ரெய்மன், முத்து, முருகானந்தம், தாசன், பிலிப், சுடலை, அந்தோணி, இன்னாசி, லேடன், தவிதம், சுமன், ஆரோக்கியசாமி, முனியசாமி, கெபிசன், சுரேஷ், ராபின், முருகன், கேபி ஆகிய 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடத்தி சென்று விட்டனர். மீனவர்களின் 4 படகுகளையும் பறிமுதல் செய்து விட்டனர். கடத்தப்பட்ட 19 மீனவர்களையும் இலங்கை தலைமன்னாரில் உள்ள முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலையில் இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டு ராமேசுவரம் மீனவர்களை தாக்கி கடத்தி சென்று விட்டனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
இன்று அதிகாலையில் கச்சத்தீவு அருகே ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது 5 குட்டி கப்பல்களில் இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோர காவல் படையினர் அங்கு வந்தனர். கடலில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்களை பார்த்து எச்சரித்தனர்.
பின்னர் மீனவர்களை சரமாரி தாக்கி மீன் வலைகளை அறுத்து எறிந்தனர். மேலும் ஆத்திரம் அடங்காமல் 11 படகுகளில் இருந்த 50 மீனவர்களையும் கடத்தி சென்று விட்டனர். கடத்தப்பட்ட மீனவர்களை அவர்கள் நெடுந்தீவு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
மீனவர்கள் மீண்டும் கடத்தப்பட்டதால் ராமேசுவரம் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் வடித்து வருகிறார்கள். இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுத்து மீனவர்களை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாலைமலர்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum